Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 9, Verse 5

ந ச1 மத்1ஸ்தா2னி பூ4தா1னி ப1ஶ்ய மே யோக3மைஶ்வரம் |

பூ41ப்4ருன்ன ச1 பூ41ஸ்தோ1 மமாத்1மா பூ41பா4வன:||5||

ந—-இல்லை ச-—மற்றும்; மத்—ஸ்தானி—--என்னில் நிலைத்திருக்கின்றன; பூதானி-—எல்லா உயிரினங்களும்; பஶ்ய——காண்பாய்; மே——என்; யோகம் ஐஶ்வரம்——தெய்வீக ஆற்றலை; பூத—ப்ருத்——அனைத்து உயிரினங்களையும் ஆதரிப்பவர்; ந——இல்லை; ச——ஆயினும்; பூத-ஸ்தஹ——வசிக்கின்ற; மம——என்; ஆத்மா——சுயம்; பூத—பாவனஹ——அனைத்து உயிரினங்களையும் படைத்தவர்

Translation

BG 9.5: இருப்பினும், உயிர்கள் என்னில் உறைவதில்லை. என் தெய்வீக ஆற்றலின் மர்மத்தைப் பார்! எல்லா உயிர்களையும் நான் படைத்தவனாகவும், பராமரிப்பவனாகவும் இருந்தாலும், நான் அவற்றால் அல்லது ஜட இயற்கையால் பாதிக்கப்படவில்லை.

Commentary

முந்தைய வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாயா சக்தி மற்றும் ஜீவ சக்திக்கு அப்பால் கடவுளின் மூன்றாவது ஆற்றல் உள்ளது. இது யோகமாயா சக்தி என்று அழைக்கப்படுகிறது, இதை அவர் இந்த வசனத்தில் தெய்வீக ஆற்றல் என்று குறிப்பிடுகிறார். யோகமாயா என்பது கடவுளின் சக்தி வாய்ந்த ஆற்றல். இது கர்1து1ம்-அக1ர்து1ம்-ஸமர்தத2ஹ 'அசத்தியமானதை சத்தியமாக்கக்கூடியது' என்று அழைக்கப்படுகிறது, மேலும் அவரது ஆளுமைக்கு நாம் காரணம் கூறும் பல அற்புதமான விஷயங்களுக்கு இது காரணமாகும்.உதாரணமாக, கடவுள் நம் இதயங்களில் அமர்ந்திருக்கிறார், ஆனால் நாம் அவரைப் பற்றி உணரவில்லை. ஏனென்றால், அவருடைய தெய்வீக யோகமாயா சக்தி நம்மை அவரிடமிருந்து தொலைவில் வைக்கிறது.

அவ்வாறே, கடவுளும் தன்னை மாயாவின் தாக்கத்திலிருந்து ஒதுக்கி வைக்கிறார். பாகவதத்தில், வேதங்கள் இறைவனைப் போற்றுகின்றன:

விலஜ்ஜமானயா யஸ்ய ஸ்தா2து1மீக்ஷா-ப1தே2 'முயா (2.5.13)

‘கடவுளுக்கு முன்பாக நிற்கக்கூட மாயா வெட்கப்படுகிறாள்.’ கடவுள் மாயையில் வியாபித்திருந்தாலும், பொருள் சக்தியாக இருந்தாலும், அவர் அதிலிருந்து விலகி இருப்பது ஆச்சரியமல்லவா? இது யோகமாயாவின் மர்ம சக்தி.

உலகம் கடவுளின் மீது செல்வாக்கு செலுத்த முடிந்தால், அதன் அழிவு நேரத்தில், அவரது இயல்பு மற்றும் ஆளுமை ஆகியவை மோசமடையும். ஆனால் உலகில் அனைத்து மாற்றங்களும் இருந்தபோதிலும், கடவுள் தனது ஆளுமையில் நிலைநிருத்தப்படுகிறார். அதன்படி, வேதங்கள் கடவுளை தஶாங்குலீ அல்லது'பத்து விரல்கள்' என்று அழைக்கின்றன. அவர் உலகில் இருக்கிறார், இன்னும் பத்து விரல்களுக்கு அப்பால் இருக்கிறார், அதாவது, தீண்ட படுவதில்லை.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
9. ராஜா வித்யா யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!